சந்தனாரின் ப்ளோகில் பின்னுட்டம் இட்டது. பின்னொரு நாள் தனி பதிவாய் அக்கும் என்னத்தில் உள்ளேண்.
ஆணந்தின் அந்த காழ்ப்பு நிறைந்த கட்டுரை பற்றி. எந்த வித தரவுகளும் இல்லாமல், மனம் போன போக்கில் ஒரு கட்டுரையை எழுதி விட்டு, பின் அந்த கட்டுரையையே இந்த எச்சில் குடிக்கு அலையும் மனிதரகள் ஆதாரமாக காட்டி, ராஜா பாப் மார்லே, டைலன், கத்தர் (வரதராஜன் பெயரை மிக தெளிவாக தவிர்த்து விட்டு) போன்றோரை குப்பை என்று சொன்னார் என மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்கள். ஒரு பொய்யை இப்படி சொல்வதன் மூலம் மெய் ஆக்கி விடலாம் என்பது இவர்களின் கனிப்பு. மெய் அப்படி ஒன்னும் அழிந்து விடாது, ஏதேனும் ரூபத்தில் அது தன்னை புலப்படுத்தும். ஆணந்தின் அந்த கட்டுரை இதோ http://www.outlookindia.com/article.aspx?228024
‘அன்புள்ளம்’ கொண்ட ஷாஜி இந்த கட்டுரையை படித்து தெளிவு பெறட்டும். அன்பற்ற ராஜா தனது வரலாற்று கடமையை செய்து கொண்டிருக்கட்டும். 1999’இல் வெளியான பிரேம்:ரமேஷின் ‘இளையராஜா: இசைமொழியும் தத்துவமும் என்ற புத்தகத்துக்கு செவ்வி அளித்த ராஜா இதே போன்றதொரு கேள்வியாய் புரட்சிகர மற்றும் மக்க்ளுக்கான் இசை படைப்பத்தை பற்றி கேட்க்கபட்ட பொழுது, மிக தெளிவாக மக்களை உறக்கத்தில் இருந்து எழுப்பும் அவ்வகை இசை சமூகத்துக்கு மிகவும் அவசியம் என்றும், ஆணால் அந்த இசை அனிச்சையாகவோ, இச்சையாகவோ செய்யாத பட்சட்த்தில் சும்மா இருப்பதே மேல் என்கிறார்.
ஆர்த்தம் புரியாத கபோதிகளுக்கு எனது மொழிபெயர்ப்பு “புரட்ச்சிகர இசை என்பது ஆத்மார்த்தமான அர்பணிப்பு உனர்வோடு செய்ய வேண்டும், சும்மா நானும் புர்ச்சி பன்றேன் சமூகதிற்க்கு சேவை செய்கிறேன் என்னும் இந்த முதலாளித்துவ சமூக சட்ட திட்டகளுக்கு உட்பட்டே ‘பிரே ஃபார் மீ பிரதர்’ என்று சோனி கம்பெனியின் வழிக்காட்டுதலில் புரட்சி செய்யாதே” (தவிர்க்க முடியாமல் அவரை பற்றி இழுத்து விட்டேன், மன்னிக்கவும்).
இப்பொழுது ஷாஜி எழுதி இருக்கும் இந்த கட்டுரையே நாளை சாரு போன்றோருக்கு ஓ.என்.வி.யை பழசிராஜா பாடல்களின் தோல்விக்கு காரணம் என்று கூறினார் ராஜா என எழுதுவதற்க்கு ஆதாரமாகி விடும். தனக்கு நன்றாக தெரியாத ஒரு விஷயத்தை, ஒரு பொது மேடையில் ராஜா எதற்க்கு கூறினார் என வியக்கும் ஷாஜி போன்றோருக்கு இலவசமாய் sivajitv.com மற்றும் youtube’இல் கிடைக்கும் ராஜாவின் பேச்சை கேட்க நேரம்தான் இருக்காது.
வாசகர்களுக்கு இங்கு இருக்கு லிங்கு:
Part I
Part II
படங்களின் பாடல்களின் தோல்விக்கு காரணம் ஓ.என்.வி என எங்காவது அவர் சொல்லி இருப்பதை இந்த விடியோக்களில் கண்டுபிடித்து எவரேனும் சொல்லி விட்டால், ராஜா ரசிகர்கள் நாங்கள் கூட்டமாக தற்கொலை செய்து கொள்கிறோம். சாருவை போல் இது வெத்து ஜம்பம் இல்லை ‘பா’ பட பாடல்கள் வட இந்தியாவில் நல்ல ஹிட் ஆகி விட்ட பின்பும் தொடர்ந்து வெட்கமில்லாமல் எழுதி கொண்டிருக்க. அவருக்கு வெட்கம் எல்லாம் இல்லை என்பது தான் நமக்கு தெரியுமே என கேட்காதீர்கள். பாவம் அவர் தனது பெட்ரூமில் ‘தென்றல் வந்து தீன்டும் போது’ பாட முடியாமல் கஷ்டபடுகிறார். பதிலாக எமினெமின் ‘BLEED YOU BITCH BLEED’ என பாடுவார், அதனால்தான் அவருக்கு வெடகமில்லாமல் போய் விட்டது. குறைந்தபட்ச நேர்மையையாவது நாம் அவரிடம் எதிர்பார்க்க முடியுமா? அவதாரத்தின் அந்த பாடல் ஒரு பார்வையற்ற பென்ணுக்கு வன்ணங்களை பற்றி விளக்கும் ஒரு முயற்சி, காதல் பாடல் அல்ல, என்பதை அவர் நேர்மையாய் அலசி பார்க்க தயாரா?
யுவனின் பருத்திவீரன் பாடல்களை சிலாகித்து மன்னின் இசை இது, இப்படி ராஜாவிடம் எதிர்பார்க்க முடியாது என எழுதிய அவர் யுவனின் ‘ஊரோரம் புளிய மரம்’ என்ற பாடல் ராஜாவின் புதிய வார்ப்புகள் படத்தில் வந்த ‘திருவிழா கூத்து’ எனும் பாடலின் அப்பட்டமான பிரதி என்பதை பரிசிலிக்க தயாரா? ‘திருவிழா கூத்து’ பாடலின் கடைசி வரி எந்த நகரத்து/நாகரிக மனிதனினும் கலாச்சார பொய்மைகளை தகர்த்து விடும் ஆற்றல் கொண்டது என்பதை அவர் மறுப்பாரா? தெரிந்தே அதை தனது இசையில் படைக்கும் ராஜா, இவர் போன்றோரின் அற்ப புத்திசாலித்தனங்களுக்கும், wikipedia எழுத்துக்களுக்கும் பிடிபடமாட்டார். மெய்யான பின் நவீனத்துவ இசை படைத்து இந்த சமூகத்தை முடுக்கி விட்டு கொண்டே இருக்கிறார். அவரது இசை கலடைஸ்கோப் போல் பல்வேறு கோலங்களை உள்ளடக்கியது, இது புரியாத ‘கற்பூர’ வாசம் அறியாததுகள்…தங்கள் நிலையில் இருந்து பரினாம வளர்ச்சி பெற எத்தனிக்காத வரை ஒன்றும் செய்ய முடியாது.
yaarunganna neenga,enga irundhu…
kudigaara kamnaatty ezdhuthurathai-ellam serious-a eduthukkathinga…. cool down… if i m not wrong, here after 50yrs, his all compositions going to be analysed for Ph.D(hw the sounds from this man influencing human feelings,thoughts n moods.